ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இருதரப்புக்கும் இடையில் சுமார் ஒரு மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளிக்காத நிலையில், இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதியுடனான கலந்துரையாடலில் எதிர்வரும் வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், சலுகைகள் தொடர்பிலும் இருதரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...