டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் நாடு ஆட்டோ ஓட்டுனர்!

Date:

விழுப்புரத்தை சேர்ந்த லூர்துராஜ் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

அந்த ஆட்டோ ஓட்டுநரை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வியந்து போனேன்  ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம்” என குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், ஆட்டோ ஓட்டுநருக்கு சால்வை அணிந்து மகிழ்ந்தார் வைரமுத்து. பின்பு அவரிடம் ‘இரக்கமுள்ள மனசுக்காரன்டா… நான் டாக்டர் பட்டம் வாங்க போரண்டா…’ என பாடி அந்த ஆட்டோ ஓட்டுநரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் உயர்கல்வி அல்லது கல்லூரியில் அவருக்கு இடம் வாங்கி கொடுக்க அருகில் இருந்தவரிடம் அறிவுறுத்தினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...