தேசிய மீலாத் நிகழ்வு பிற்போடப்பட்டது!

Date:

முசலி சிலாபத்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா திட்டமிட்டபடி அன்று நடைபெற மாட்டாது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதனாலேயே தேசிய மீலாத் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேசிய மீலாத் விழா எப்போது நடைபெறும் என அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக திணைக்களத்தின் பணிப்பாளர் இட்.ஏ.எம்.பைசல் தெரிவித்தார்.

தேசிய மீலாத் நிகழ்வினை முன்னிட்டு 10 பள்ளிவாசல்கள் தலா ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளன அத்தோடு இந்து கோயிலொன்றும் பௌத்த ஆலயமொன்று புணரமைக்கப்படவுள்ளன.

அன்றைய தினம் மீலாத் தின நினைவாக விசேட முத்திரை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இரத்ததான ஏற்பாடுகளும் நாடு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...