நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தெவட்டகஹ பள்ளிவாசலின் கொடியேற்றம்!

Date:

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

அண்ணல் நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தெவட்டகஹ செய்யக் உஸ்மான் வலியுல்லாஹ் தர்ஹா மற்றும் பள்ளிவாசலின் கொடியேற்றம் அண்மையில் பெருந்திரளானவர்களின் பங்கு பற்றுதலுடன்  இடம்பெற்றுள்ளது.

தெவட்டகஹ பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த செய்யத் அப்துல் கரீம் தங்கள், பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், கலாநிதி ஹஸன் மெளலானா உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அன்றைய தினம் மாலை இடம் பெற்ற கொடியேற்ற நிகழ்வை தொடர்ந்து நபியவர்களின் பெயரில் மெளலீது நிகழ்வு ஆரம்பமானது.

குறித்த மெளலீது வைபவம் 12 தினங்களுக்கு மாலை மஹ்ரிபு தொழுகையைத் தொடர்ந்து இடம் பெறும் எனவும் நபி பிறந்த தினமான எதிர்வரும் 28ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதான தமாம் வைபவம் இடம் பெறும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...