நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களுக்கு கடும் நடவடிக்கை: சுகாதார அமைச்சு

Date:

முன்னறிவிப்பின்றி வெளிநாடு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணர், முன் அறிவித்தல் இன்றி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய சம்பவத்தை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் முன் அனுமதியின்றி மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போதைய சூழலில், மருத்துவர்கள் பல காரணங்களை கூறி நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.

எவ்வாறாயினும், முன்னறிவிப்பு இன்றி ஒரு மருத்துவர் நாட்டை விட்டு வெளியேறினால், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

“இனிமேல், அத்தகைய மருத்துவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளுடன் கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். நடவடிக்கைகளின் தன்மை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து தங்கள் பொறுப்புகளை புறக்கணித்த மொத்தம் 103 விசேட மருத்துவர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல மருத்துவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...