பங்களாதேஷுக்கு 100 மில்.டொலர்களை திருப்பி செலுத்தியது இலங்கை

Date:

2021ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இலங்கை கடனாக பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்களில் மேலும் 100 மில்லியனை மீள செலுத்தியுள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் Md Mezbaul Haque இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு மூன்று தவணைகளில் செலுத்தும் வகையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷ் இலங்கைக்கு கடனாகக் கொடுத்தது.

இலங்கை குறித்த கடனை விரைவாக செலுத்த வேண்டுமென அண்மையில் பங்களாதேஷ் அறிவித்திருந்த நிலையில், ஓகஸ்ட் 17ஆம் திகதி முதல் தவணையாக 50 மில்லியன் டொலர்களை இலங்கை திருப்பிச் செலுத்தியது.

இரண்டாவது கட்டமாக நேற்று 100 மில்லியன் டொலர்கள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 50 மில்லியன் டொலர்கள்  இம்மாத இறுதிக்குள் இலங்கை செலுத்துமென பங்களாதேஷ் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பங்களாதேஷுடன் நாணய பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, வழங்கப்படும் கால எல்லையின் பின்னர் இலங்கை மூன்று மாதங்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...