புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை!

Date:

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட புலத்சிங்கள ஹல்வத்துறை தமிழ் வித்தியாலயம், பரகொட கித்துல கொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் மேல் வெல்கம கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த மொல்காவ தர்மபால மகா வித்தியாலயம், வெள்ள அபாயம் குறையும் வரை சிறுவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...