மனிதப் பாவனைக்குதவாத ஒரு இலட்சம் கிலோ கழிவுத் தேயிலை மீட்பு!

Date:

கம்பளையில் மனித பாவனைக்கு உதவாத ஒரு இலட்சம் கிலோ கழிவுத் தேயிலை எத்கல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பளை உலப்பனை பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் கிலோவுக்கும் அதிகமான மனித பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலைகளை எத்கல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

எத்கல பொலிஸார் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றினை சோதனையிட்டபோது அதற்குள் அனுமதிப்பத்திரமின்றி ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திலிருந்து உலப்பனை பகுதிக்கு கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பத்தாயிரத்து 500 கிலோகிராம் கழிவுத் தேயிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, லொறியின் சாரதியை கைதுசெய்து மேற்கொண்ட விசாரணையின்போதே மேற்குறிப்பிட்ட களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் நேற்று (25) மாலை தேயிலை சபையின் கம்பளை கிளை அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் குறித்த களஞ்சியசாலையினை சோதனையிட்டதுடன், இரசாயன பரிசோதனைகளுக்காக தேயிலை மாதிரிகளையும் சேகரித்தனர் .

பொலிஸாரின் விசாரணையின்போது குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளர் சமூகமளிக்காததால் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...