‘ராஜபக்ஷ என்ற பெயர் மீது ‘செனல் 4′-க்கு வரலாற்றுக் கோபம்’

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ‘செனல் 4’ ஊடகம் தயாரித்து வெளியிட்டுள்ள காணொளி நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

செனல் 4 வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை தயாரிப்பதில் நம்பகத்தன்மை இருக்குமானால் அது ஏன் நீக்கப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இந்த காணொளி பயங்கரவாதிகளை ஒழித்ததற்காக ராஜபக்சர்களை பழிவாங்கும் மற்றொரு முயற்சியாக இருக்கலாம். அல்லது ஒருவரின் அரசியல் நோக்கத்தை திருப்திபடுத்தும் முயற்சியாக இருக்கலாம்.

2009ல் போரை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, எனது குடும்பத்தினர், எனது தந்தை மற்றும் ராஜபக்சவின் பெயர் மீது ‘செனல் 4க்கு’ வரலாற்றுக் கோபம் உள்ளது.

அவர்கள் ராஜபக்சக்களுக்கு எதிரான காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். நான் செனல் 4 ஐ ஒரு ஊடக நிறுவனமாக பார்க்கவில்லை. காணொளி உற்பத்தி நிறுவனமாகவே பார்க்கின்றேன்” என்று அவர் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும், சம்பவத்தை அரசியலாக்குவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...