157 வருடங்களாக சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் பொலிஸ் சேவையை கௌரவிப்பதற்கும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜிதில் உள்ளூர் சமூகத்தினர் ஒன்று கூடி பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியானது ஒற்றுமையின் தருணமாக இருந்ததுடன் அங்கு சமூகம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கொண்டாட்டத்திலும் பிரதிபலிப்பிலும் கைகோர்த்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் முழு சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தார்.
இதன்போது, மாளிகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாத்திய ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,
பொலிஸ் சேவை என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, ஆனால் சமூகத்தை மரியாதையுடனும் நேர்மையுடனும் பாதுகாக்கவும் சேவை செய்யவும் அர்ப்பணிப்பு என்று தெரிவித்தார்.
மேலும், ‘எங்கள் கடமை சட்டங்களை அமல்படுத்துவதற்கு அப்பாற்பட்டது இது நம்பிக்கையை வளர்ப்பது, உறவுகளை வளர்ப்பது மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் தினத்தை நினைவுகூரும் முகமாகவும், மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர் ஜயசிங்கவின் உத்வேகமூட்டும் உரை மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கான பாராட்டுச் சின்னமாகவும், மஸ்ஜிதில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நிர்வாக சபையினால் விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
Photo courtesy- Ar media