50 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது: இந்தியா நிதானமான துடுப்பாட்டம்

Date:

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இதன்படி, இந்திய அணிக்கு 51 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பம் முதலே பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் அதிகபட்சமாக 17 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் ஐந்து வீரர்கள் ஓட்டங்களை எதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் ஆறு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

51 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

2.4 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், இன்னும் வெற்றிபெற இந்திய அணிக்கு 20 ஓட்டங்களே தேவைப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...