அதிக செலவு செய்யும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆய்வு செய்ய தீர்மானம்

Date:

அதிக செலவு செய்யும் பத்து அமைச்சுக்களின் செலவுகளை பகுப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் படி, இது தொடர்பான அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கை தொடர்பான தனது அரசாங்கத்தின் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் அமைப்பில் ஒரு தேசிய கொள்கை இல்லாதது மற்றும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பின்னடைவு போன்ற ஒரு பெரிய வெற்றிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“எங்களிடம் நிலையான கொள்கைகள் இருக்க வேண்டும். தேசிய கொள்கைகள் குறித்த அறிக்கையை வழங்கிய குழு ஒன்றை பாராளுமன்றம் நியமித்துள்ளது. இந்த தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் அதிகாரப்பகிர்வு நடைபெறலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அமுலாக்கக் கட்டமைப்பின் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...