இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் சர்ச்சை

Date:

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின்  இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்ட விடயம் சர்வதேச அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வார இறுதியில் இறுதியில் இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதுடன், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான திகதி தொடர்பிலும் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

‘Shi Yan 6’ எனும் சீன கடல்சார் ஆய்வு கப்பல் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரிய பின்னணியிலே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமைவதாக குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச ரீதியில் பல்வேறு அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையினர் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் நான்காவது பலம் வாய்ந்த இராணுவ சக்தியாக கருதப்படும் இந்திய பாதுகாப்பு படையின் தலைவரின் வருகை இரத்து செய்யப்படுவது பாரிய பிரச்சினை என அரசியல் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விஜயத்தின் பொது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...