ஈஸ்டர் தாக்குதலுக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை: அனுரகுமார

Date:

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்று ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான எந்த விசாரணை அறிக்கையிலும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த இரண்டு பேரின் தந்தையான வர்த்தகர் இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி உரையாற்றிமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டு புஷ்வானமே அன்றி உண்மையான வெடியல்ல.

இப்ராஹிமுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் சட்டத்தரணியாக அலி சப்றியே முன்னிலையாகி இருந்தார்.

அவருக்கு சட்டத்தரணியாக இருந்தார் என்பதற்காக அலி சப்றிக்கு பயங்கரவாத செயலுடன் தொடர்புள்ளது என கூற முடியாது.

இப்ராஹிம் ஒன்றரை இரண்டு வருடங்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன் போது கூட மக்கள் விடுதலை முன்னணிக்கும் தாக்குதலுக்கு தொடர்புள்ளமைக்கான எவ்வித விடயங்களும் வெளியாகவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...

Re building Sri lanka திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re...

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri...