ஒக்டோபர் முதல் இலத்திரனியல் நீர் கட்டணப் பட்டியல்!

Date:

ஒன்லைன் மூலமான இலத்திரனியல் நீர் கட்டணப் பட்டியல் முறைமையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அச்சிடப்பட்ட நீர் கட்டண பட்டியலுக்கு பதிலாக இலத்திரனியல் நீர் கட்டணப் பட்டியல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

344,697 நீர் வழங்கல் இணைப்புகளில் 326,124 இணைப்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள் இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களுக்காக இதுவரை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத, தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதேசங்களில் முதற்கட்டமாக இப்புதிய முறைமையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பாவனையாளர்களுக்கான நீர் கட்டணத்தை வழங்குவதில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

பரீட்சார்த்தமாக கொழும்பு தெற்கு நகர்ப்பகுதி, கண்டி தெற்கு நகர்ப்பகுதி, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் இவ்வாறு இலத்திரனியல் கட்டணப் பட்டியல் முறைமைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அதை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...