சவூதி அரேபிய தூதரகம் நடத்தி வரும் கண் சிகிச்சை முகாம் 16 ஆம் திகதி வரை!

Date:

உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பங்களைப் போக்கும் வகையிலான சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையில், இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், முடிக்குரிய இளவரசரும் சவூதி அரேபியாவின் பிரதமருமான அதிமேதகு இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் ஸஊத் மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தினதும் தயாள உத்தரவுகளின் கீழ் 2023 செப்டெம்பர் 07 முதல் 16 வரையான காலப்பகுதியில் இலங்கையில் பார்வைக் குறைபாட்டுக்கெதிரான தன்னார்வ திட்டத்தை செயல்படுத்துகிறது.

ஆயிரக்கணக்கானவர்களின் நோய்களைக் கண்டறிந்து அவர்களை மருத்துவச் சேவைகளை வழங்குதல், சத்திரசிகிச்சை மேற்கொள்ளல், சிகிச்சையளித்தல், மருந்துகள் வழங்குதல், கண்புரை அகற்றல் என வகைப்படுத்தல் நடைபெறுகின்றது.

அத்துடன் தேவையானவர்கள் சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுவதோடு கண்ணாடிகள் மற்றும் லென்ஸுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதோடு சிகிச்சைக்கு வந்தவர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு அறிவூட்டல்களும் நடத்தப்படுகின்றன.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...