சவூதி அரேபிய தூதரகம் நடத்தி வரும் கண் சிகிச்சை முகாம் 16 ஆம் திகதி வரை!

Date:

உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பங்களைப் போக்கும் வகையிலான சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையில், இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், முடிக்குரிய இளவரசரும் சவூதி அரேபியாவின் பிரதமருமான அதிமேதகு இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் ஸஊத் மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தினதும் தயாள உத்தரவுகளின் கீழ் 2023 செப்டெம்பர் 07 முதல் 16 வரையான காலப்பகுதியில் இலங்கையில் பார்வைக் குறைபாட்டுக்கெதிரான தன்னார்வ திட்டத்தை செயல்படுத்துகிறது.

ஆயிரக்கணக்கானவர்களின் நோய்களைக் கண்டறிந்து அவர்களை மருத்துவச் சேவைகளை வழங்குதல், சத்திரசிகிச்சை மேற்கொள்ளல், சிகிச்சையளித்தல், மருந்துகள் வழங்குதல், கண்புரை அகற்றல் என வகைப்படுத்தல் நடைபெறுகின்றது.

அத்துடன் தேவையானவர்கள் சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுவதோடு கண்ணாடிகள் மற்றும் லென்ஸுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதோடு சிகிச்சைக்கு வந்தவர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு அறிவூட்டல்களும் நடத்தப்படுகின்றன.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...