சிங்கள மக்கள் தான் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக பிடித்தவர்கள்:முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

Date:

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக பிடித்துதான் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். தவறு எமது பக்கத்தில்தான் உள்ளது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

காணி அதிகாரம் வழங்கினால் வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் காணிகளை பலவந்தமாக பிடித்துக்கொள்ளலாம் என்ற கருத்து பரவலாக பரப்பட்டு வருகின்றது. இது தவறான கருத்ததாகும்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் காணிகளை பிடித்துக்கொள்ளவில்லை. தமிழர்களின் காணிகள் பிடிக்கப்பட்டுதான் சிங்கள குடியேற்றங்கள் அமர்த்தப்பட்டுள்ளன.

இதனை நான் சொல்வதால் என்னை சார்ந்தோர் என்னை திட்டலாம். இருப்பினும் இதுவே உண்மை.

கல்லோயா திட்டம், வெலிஓயா திட்டம் என்பவற்றுக்கான காணி வடக்கு மக்களுக்குரியது. ஆனால் தற்போது அங்கு பலவந்தமாக இராணுவத்தினர் குடும்பமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சிலவேளை காணி அதிகாரம் வழங்கினால் அரச காணிகள் பறிபோகலாம் என்ற ஐயப்பாடு சிலருக்கு உள்ளது.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், மாகாண அரசுடன் பேச்சு நடத்தி, அபிவிருத்திக்காக மத்திய அரசு தேவையான காணியை பெறலாம்.

தனிநபர்களுக்கு காணி வழங்குவதாக இருந்தால் அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குதான் உள்ளது. மாறாக மாகாணசபைகளுக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...