சிறைச்சாலைகளில் பரவும் அம்மை நோய்: கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை!

Date:

சிறைச்சாலைகளில் தற்போது பரவி வரும் அம்மை நோயை விரைவாகக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

எனவே சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளுக்கு உடனடியாக தடுப்பூசியை செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார்.

கடந்த சில வாரங்களில் கொழும்பு விளக்கமறியல் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதோடு சுமார் 20 கைதிகள் மற்றும் அதிகாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் அம்மை நோய் வெளி சமூகத்திற்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்துவது சிறைச்சாலை திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...