சிறைச்சாலைகளில் பரவும் அம்மை நோய்: கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை!

Date:

சிறைச்சாலைகளில் தற்போது பரவி வரும் அம்மை நோயை விரைவாகக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

எனவே சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளுக்கு உடனடியாக தடுப்பூசியை செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார்.

கடந்த சில வாரங்களில் கொழும்பு விளக்கமறியல் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதோடு சுமார் 20 கைதிகள் மற்றும் அதிகாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் அம்மை நோய் வெளி சமூகத்திற்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்துவது சிறைச்சாலை திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...