சூட்கேஸில் இருந்து சடலம் மீட்பு: சீதுவையில் அதிர்ச்சி!

Date:

சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் நேற்றிரவு பயணப் பைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், சடலம் நீல நிற பயணப் பையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை, அவர் 35 மற்றும் 40 வயது மதிக்கத்தக்கவர் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 5’8” உயரம் கொண்ட ஒரு ஆண், சிவப்பு நிற சட்டை மற்றும் பழுப்பு நிற கால்சட்டை அணிந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் கழுத்தின் வலது பக்கத்தில் 07 நட்சத்திரக் குறிகள் கொண்ட பச்சை குத்தப்பட்டிருப்பதாகவும், அவரது தலை மற்றும் தாடியின் இரு பக்கங்களிலும் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...