ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இருதரப்புக்கும் இடையில் சுமார் ஒரு மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளிக்காத நிலையில், இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதியுடனான கலந்துரையாடலில் எதிர்வரும் வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், சலுகைகள் தொடர்பிலும் இருதரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

 

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...