தோட்டக்காட்டான்’ சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம்: முரளி படத்தில் இடம்பெறும் வார்த்தைக்கு மனோ கண்டனம்

Date:

800 படத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவரவுள்ள 800  படத்தின் முன்னோட்ட காணொளியில் “தோட்டக்காட்டான்” என்ற சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் இடம்பெற்றிருந்தது.

“இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில்,  தடை செய்யப்பட்ட  வார்த்தையை உங்கள் பட முன்னோட்டத்தில்  பயன்படுத்த வேண்டாம்.

அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து காட்டியுள்ளேன். கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம். நானே ஒரு கதாசிரியர்.

எனக்கு இது தெரியும். அந்த இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று பயன்படுத்துங்கள், சரியாக வரும்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...