பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு!

Date:

பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரு மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குண்டுவெடிப்பில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...