புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (25) இரவு 11.20 மணியளவில் 2.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.