லசந்தவை கொலை செய்தவர்கள் சபையில் இருக்கின்றனரா?: சஜித் கேள்வி

Date:

ஊடகவியலாளர் லசந்த விக்ரமசதுங்க  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்திற்கு பெரும் பலமாக இருந்தவர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை நடத்தாதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் இந்த சபையில் இருக்கின்றாரா? என சஜித் பிரேமதாச மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு தான் அஞ்சவில்லை எனவும் இறக்கவும் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு வெளியிட்ட இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான ஆவணப்படுத்தலில், லசந்த விக்ரமதுங்கவை, கொழும்பு திரிபோலி இராணுவ முகாமில் இயங்கி வந்த ஆயுதக்குழுவே கொலை செய்ததாக தெரிவித்திருந்தது.

 

 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...