இன்றைய வானிலை அறிவிப்பு: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

Date:

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இவ்வாறு சிவப்பு நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நில்வலா கங்கை, களுகங்கை, கிங்கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சில பிரதேசங்களில் நீர் மட்டம் சிறிதளவு குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், நில்வலா கங்கையின் கரையோர மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட சிவப்பு அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...