இலங்கையர்கள் தொடர்பில் எதனையும் கூறமுடியாது: இஸ்ரேலுக்கான இலங்கைத்தூதுவர்

Date:

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலுக்கு மத்தியில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் கண்டறியும் வகையில் மேற்கு காசா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தூதுவர் தமது விஜயத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு தரப்பினர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய தமது விஜயத்தை நிறுத்திவிட்டு திரும்ப நேரிட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

போர் சூழலுக்கு மத்தியில் இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இலங்கையர்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் நேற்றைய தினம் ( 11) இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உள்ளிட்ட பிரதிநிதிகள் மேற்கு காசா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தூதுவர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.

இந்த பின்னணியில், காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் உரிய தகவல்களை வழங்க முடியாதுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...