ஈஸ்டர் தாக்குதல்: இலங்கை கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம்!

Date:

இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைவதற்காக உள்ளுர் விசாரணைக்கு அந்த கடிதத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான, நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர்களான கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல ஆயர்கள் கையெழுத்திட்ட இந்த கடிதத்தில், முந்தைய விசாரணைகளில் முக்கியமான பிரச்சினைகளை புறக்கணித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு இயக்குநரகம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை சஹ்ரானுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தன என்பது தெளிவாகிறது.

இந்த விசாரணைகளைத் தடுக்கவும் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை ‘செனல் 4’ காணொளியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் இலங்கை கத்தோலிக்க திருச்சபை குழு கோரியுள்ளது.

இந்த விசாரணையை வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த குழு வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...