காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“நீங்களும் ஒருநாள் கொல்லப்படுவீர்கள்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்படும் மூர்க்கமான தாக்குதலால் அப்பாவி பொதுமக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் நசீப் இல்மாஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிப்பிட்டு “ஒருநாள் உங்களையும் சுட்டு வீழ்த்துவார்கள். அப்போது நீங்களும் இறப்பீர்கள்” என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.