‘ஊற்றெடுக்கும் அருவிகள்’: கம்பஹா வலய தமிழ் மொழி மூல பாடசாலைகள் இணைந்து நடத்திய கண்காட்சி

Date:

கற்றல் செயற்பாடுகளில் வகுப்பறைக் கற்றலுக்கு மேலதிகமாக நடைமுறையுடன் தொடர்புபடுத்தி மாணவர்களுக்கு விளக்குவது அவர்களுடைய உள்ளத்தில் ஆழப் பதிய வைப்பதற்கான சிறந்த சாதனமாகும்.

அதற்கான சிறந்ததொரு செயற்பாட்டை கம்பஹா வலய தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் இணைந்து செய்து காட்டியிருக்கின்றன.

களனிய, கம்பஹா கல்வி வலயங்களின் தமிழ் மொழி மூல பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ட்டீ.எம். தௌஸீரின் வழிநடத்துதலில் ஊற்றெடுக்கும் அருவிகள் எனும் பெயரிலான இரண்டு நாள் கண்காட்சி இம்மாதம் 25,26 ஆம் திகதிகளில் திஹாரிய தாருஸ் ஸலாம் ஆரம்பப் பிரிவு பாடசாலையில் நடைபெற்றது.

கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வுகளில் கம்பஹா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. M.A. அநுர பிரேமலால் அவர்களும், ஆரம்பப் பிரிவு பணிப்பாளர் திருமதி. தினேஷா தரங்கனி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இரண்டாவது நாளில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. ஹர்ஷ எதிரிசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

தரம் 01 முதல் 05 வரையான சுற்றாடல் பாடத்தின் அனைத்து அலகுகளையும் உள்ளடக்கியதாக கண்காட்சி அமைந்திருந்தது. குறிப்பாக இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான சிறந்ததொரு செயன்முறைப் பாடவேளையாக இது இருந்தது பலராலும் பாராட்டப்பட்டது.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விடயங்களை ஆரம்பப் பிரிவு மாணவர்களை வைத்தே விளக்கமளிக்க வைத்திருந்தமை சிறப்பாக அமைந்திருந்தது.

சுற்றாடல் பாடத்தின் 16 அலகுகளையும் காட்சிப்படுத்திருந்தமை விஷேடமானதாக இருந்தது. கண்காட்சியில் பங்கேற்ற திஹாரிய தாருஸ் ஸலாம் மாணவர்கள் மரம்,செடி, கொடிகள், வீட்டுத் தோட்டம், நிலமும் வானமும் பகுதிகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலைய மாணவர்கள் பாதுகாப்பும் கரிசனையும் அலகினைக் காட்சிப்படுத்தி இருந்தனர். எமது உணவும் நீரும் அலகுகள் கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலய மாணவர்களாலும் நாம் பயன்படுத்துபவை மற்றும் போக்குவரத்து அலகுகள் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய மாணவர்களாலும் காட்சிப்படுத்தப்பட்டன.

உடுகொட அரபா மகா வித்தியாலய மாணவர்கள் நாம் இலங்கையர், மற்றும் வேலையை இலகுபடுத்தும் வழிகள் அலகினையும் குமாரிமுல்ல மகா வித்தியாலய மாணவர்கள் எம்மைச் சூழவுள்ள பிராணிகள் மற்றும் எமது பண்டைய தகவல்கள் அலகினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
கம்பஹா கல்வி வலயத்தைத் தாண்டி ஏனைய பல பிரதேசங்களில் இருந்தும் கண்காட்சியைக் காணவந்தவர்களால் கண்காட்சி வளாகம் நிரம்பி வழிந்திருந்ததைக் காணமுடியுமாக இருந்தது.

திஹாரிய தாருஸ் ஸலாம் திஹாரிய தாருஸ் ஸலாம் ஆரம்பப் பிரிவு பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் இணைந்து அத்தனை நிகழ்ச்சிகளையும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.

கம்பஹா வலயப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் கடும் உழைப்பு இந்தக் கண்காட்சியின் வெற்றியின் பின்னால் தெரியக் கூடியதாக இருந்தது.

இதேவேளை  கம்பஹா மற்றும் களனி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெக் எம்.டி.எம். தௌசீர் கருத்து தெரிவிக்கும் போது,

எட்டு தமிழ் மொழி மூலப்பாடசாலைகளின் அதிபர்கள்,பிரதி அதிபர்கள் ஆரம்பப்பிரிவுத் தலைவர்கள், ஆரம்பப் பிரிவு வகுப்பாசிரியர்கள் கணகாட்சி இணைப்பாளர்கள் பாடசாலை பெற்றார் இணைப்பாளர்கள் மற்றும் இந்த கண்காட்சியை சிறப்பாக செய்துமுடிக்க பணத்தாலும், பொருளாலும், உழைப்பாலும், பொன்னான நேரத்தினாலும் சிறிதும் தயங்காது.

போக்குவரத்துச்செலவினங்களையும், ஏனைய செலவினங்களையும் பொறுப்பெடுத்து பிள்ளைகளுக்கு ஆக்கங்களை செய்ய உதவிய பெற்றோர் பாதுகாவலர்களுக்கும், ஆக்கங்களை ஊக்கத்தோடு செய்வதில் பங்கேற்ற “ஊற்றெடுக்கும் அருவிகளின்” அறிவின் ஊற்றுக்களான அன்பின் ஆரம்பப்பிரிவு மாணவச் செல்வங்களுக்கும் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அடுத்து ஊற்றெடுக்கும் அருவிகளுக்கு களமமைத்துக்கொடுத்த தாருஸ்ஸலாம் பாடசாலை அதிபர், ஆசிரிய ஆலோசகர்களுக்கும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,வாத்தியக் குழுவினருக்கும் அதன் பயிற்றுவிப்பாளருக்கும் கண்காட்சி ஒழுங்குகளை மேற்கொள்ள உதவிய சகல பெற்றோர்களுக்கும் இதய நன்றிககள்.

தேவையான நேரத்தில் உபகரணங்களைத் தந்துதவிய அல் அஸ்ஹர் மத்தி கல்லூரி அதிபர் ,பிரதி அதிபர்களுக்கும் கண்காட்சியில் பங்குபற்றிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இரண்டு நாட்களும் உபசரிப்பு வழங்க அனுசரனையளித்த கம்பஹா கல்வி வலயம், Colombo Tools உரிமையாளர் இக்ராம் ஹாஜியார் அவர்களுக்கும், அந்நூர் நிறுவன தலைவர் மற்றும் ஏனைய தனவந்தர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்தோடு ஏனைய கல்வி வலயங்களில் இருந்து சிரமம் பாராது வருகை தந்து கண்காட்சியை கண்டுகளித்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியருக்கும், ஊற்றெடுக்கும் அருவிகளை வற்ற விடாது அவற்றை உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.

ஊற்றெடுக்கும் அருவிகளில் இடையிடையே மேடை அமைத்து, அருமையான நிகழ்ச்சிகளை மேடையேற்றிய மாணவ மாணவியருக்கும், அவற்றை நெறிப்படுத்திய ஆசான்களுக்கும், ஊற்றெடுக்கும் அருவியின் அழகை மேலும் மெருகூட்டி காட்சிப்படுத்திய ‘Newsnow.lk’ ஊடகக் குழு மற்றும் சகோதரர் ‘Thihari TV’ றிஸ்னிக்கும் மற்றும் பெயர் குறிப்பிட மறந்த அனைவருக்கும்  தனது நன்றியை பிரதிக் கல்விப் பணிப்பாளர்  எம்.டி.எம். தௌசீர் தெரிவித்துக்கொண்டார்.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...