காஸாவுக்கான உணவு, நீர், எரிபொருள் அனைத்தையும் துண்டிக்க இஸ்ரேல் உத்தரவு!

Date:

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உலகின் மிகப் பெரிய திறந்த சிறைச்சாலையாக காஸா இருந்து வரும் நிலையில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர்ப்பிரகடனம் அவர்களது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஹமாஸின் தூபான் அல் அக்ஸா தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக இஸ்ரேல் அவர்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்து விட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மொத்தமான துண்டிப்பை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காஸாவுக்கான உணவு, நீர், எரிபொருள் விநியோகம் அனைத்தையும் துண்டித்து விடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் காஸாவில் வசிக்கும் 23 இலட்சம் திறந்த சிறைச்சாவை மக்களும் உணவு நீர் மற்றும் மின்சாரம் இன்றி தவிக்கவிடப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...