கொழும்பு வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பல்

Date:

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI Bima Suci – 945’ எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர்.

‘KRI Bima Suci – 945’ எனும் பயிற்சி கப்பலானது 95 பயணிகளால் நிர்வகிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

குறித்த கப்பல் நாட்டில் நங்கூரமிட்டிருக்கும் காலப்பகுதியில் கப்பலின் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘KRI Bima Suci – 945’ கப்பல் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று மாலை நாட்டைவிட்டு வெளியேறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...