சட்டக்கல்லூரி பரீட்சையில் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதிய பாராளுமன்ற உறுப்பினர்!

Date:

அகில இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு கடுமையான நிபந்தனைகளின் கீழ் தேர்வுத் துறையால் நடத்தப்படுகிறது.

அதன்படி, சட்டங்கள் தொடர்பிலான பாடப் புத்தகங்களை அருகில் அடுக்கி வைத்து பரீட்சைக்கான பதில்களை எழுதியதாக தகவல் வெளியானதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் உயர்மட்ட அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தவிர்க்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...