சிறுவர்களுக்கு செழிப்பான நாட்டை கட்டியெழுப்ப வேலைத்திட்டம்: ஜனாதிபதி

Date:

சவாலான சகாப்தத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பயணத்தில் தற்போதைய இளம் சந்ததியினரே முன்னோடிகளாக திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களைக் கொண்டு சவால்களை சமாளிக்கும் சமச்சீர் ஆளுமை கொண்ட திறமையான குடிமக்களாக சிறுவர்களை சமூகமயமாக்கும் வகையில் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தாம் போற்றி வந்த பெறுமதிமிக்க நற்பண்புகளை உலகுக்கு பிரதிபலிக்கும் வகையில் உலக முதியோர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...