சிறுவர்களுக்கு செழிப்பான நாட்டை கட்டியெழுப்ப வேலைத்திட்டம்: ஜனாதிபதி

Date:

சவாலான சகாப்தத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பயணத்தில் தற்போதைய இளம் சந்ததியினரே முன்னோடிகளாக திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களைக் கொண்டு சவால்களை சமாளிக்கும் சமச்சீர் ஆளுமை கொண்ட திறமையான குடிமக்களாக சிறுவர்களை சமூகமயமாக்கும் வகையில் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தாம் போற்றி வந்த பெறுமதிமிக்க நற்பண்புகளை உலகுக்கு பிரதிபலிக்கும் வகையில் உலக முதியோர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...