ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை சீனா பயணம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை சீனா செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்படிக்கைக்கு வரவுள்ளார்.

பெல்ட் அண்ட் ரோட் முயற்சியின் 10 ஆவது ஆண்டு உச்சி மாநாட்டில் ஜனாதிபதியும் கலந்துக்கொள்ள உள்ளார்.

சீனாவிடமிருந்து கடன் நிவாரணத்தைப் பெறுவதில் இலங்கை சவால்களை எதிர்கொள்கிறது என சில அறிக்கைகள் கூறினாலும், சுமார் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் நிலுவையில் உள்ள கடனுக்காக சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் அரசாங்கம் பூர்வாங்க கடன் சிகிச்சை ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக நிதியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை ஏற்கனவே உள்நாட்டுக் கடனை மேம்படுத்தும் செயல்முறையை நிறைவு செய்துள்ளது மற்றும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திவால்நிலையிலிருந்து வெளிவரத் தொடங்கப்பட்ட வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதை முடிக்க முயல்கிறது.

நான்கு ஆண்டு திட்டத்தின் கீழ் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை திறக்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டிற்கு மார்ச் மாதம் அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது கடன் நிவாரணம் தொடர்பில் கணிசமான முன்னேற்றத்தை ஜனாதிபதி அலுவலகம் எதிர்பார்க்கிறது.

கடந்த 12 மாதங்களில் இரண்டு தடவைகள் அண்டை நாடான ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போதிலும், கடந்த வருடம் பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி விக்ரமசிங்க சீனாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

Popular

More like this
Related

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...