டுப்ளிகேஷன் வீதியில் பஸ்ஸொன்றின் மீது முறிந்து வீழ்ந்த மரம்: ஐவர் உயிரிழப்பு

Date:

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டப்பகுதியில் பஸ்ஸொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து காரணமாக டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது, ​​பஸ் பின்னால் வந்த பவுசர் மற்றும் கார் ஒன்றும் பஸ் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் விமானப்படையினரும் இணைந்து பேருந்தில் சிக்கிய இருவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அந்த வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...