தனது மனைவிக்கு கிடைத்த குழந்தைக்கு “காஸா”என பெயரிட்ட ஊடகவியலாளர்.

Date:

கட்டாரின் அல்காஸ் தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாளராக பணி புரியும் ஹம்மாத் அல் உபைதி தனக்கு கிடைத்த குழந்தைக்கு காஸா எனப் பெயரிட்டு காஸா மீதான தனது ஆழமான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்வதால் மனிதாபிமானத்தை நேசிக்கும் உலகெங்கும் உள்ள மக்கள் காஸா மீதான தமது உணர்வை பல வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஹம்மாத்  காஸாவில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த அவர் எப்போது வேண்டுமானாலும் குழந்தையைப் பிரசவிக்கலாம் என்ற சூழலில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் காரணமாக காஸா நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஜுமானாவின் குடும்பத்தினர் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பிரசவத்திற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அருகில் இருந்த கட்டடம் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது.

இது குறித்து அவர் கூறும்போது, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எங்களுக்கு அருகில் இருந்த வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அந்த சத்தம் என்னை நடுங்கச் செய்தது. மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது என்று நினைத்தோம்.

திடீரென மருத்துவமனையில் அனைத்துமே தலைகீழாக மாறியது. எங்கும் சடலங்களும் காயமடைந்தவர்களின் கூக்குரலும், கதறலுமாக இருந்தது. பிரசவ வலி, குண்டுவீச்சு குறித்து சொல்லத் தேவையே இல்லை. எந்தச் சூழலாக இருந்தாலும் குழந்தையைப் பெற்றெடுத்தே தீர வேண்டும் என்பதை மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்தேன்,” என்றார்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...