தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு நியமனம்!

Date:

2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக 2518 மாணவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நாட்டில் நிலவி வரும் நிதி நிலையற்ற தன்மை காரணமாக ஆரம்ப கட்டத்தில் 1000 மாணவர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்க திறைசேரி தீர்மானித்திருந்தது.

பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அரசிடம் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசாங்க தாதியர் சங்கம் தலையிட்டு இது தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு கண்டது.

அரசாங்க தாதியர் சங்கம் சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியிடம் இது தொடர்பிலான விடையங்களை முன்வைத்ததன் விளைவாக, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு அனைவருக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...