பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக மலேசியா துணை நிற்கும்: பிரதமர்

Date:

பலஸ்தீன மக்களின் போராட்டங்களுக்கு மலேசியா தொடர்ந்து துணை நிற்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடுமை, அடக்குமுறை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை  பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த அநீதியின் விளைவாக, நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பலியாகியுள்ளன என்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காசா பகுதியில் தற்போதைய வன்முறைக்கான மூல காரணங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பலஸ்தீனியர்களுக்குரிய இடங்களை நீண்டகால சட்டவிரோத ஆக்கிரமிப்பு, முற்றுகை, துன்பம், அல்-அக்ஸாவை இழிவுபடுத்துதல் என்று பலவிதங்களில் ஆக்கிரமிப்பாளராக இஸ்ரேல் செயலாற்றி வருவதை சொல்லி மாளாது.

இஸ்ரேல் தங்கள் அரசியலுக்காக பலஸ்தீனர்களை பலியாக்கி வருகின்றது என்று வெளியுறவு அமைச்சகம்  ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில், மேலும் உயிரிழப்புகள், துன்பங்கள்,  அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மத்திய கிழக்கின் சமீபத்திய வன்முறைகள் குறித்து மலேசியா கவலைப்படுகிறது.

சர்வதேச அமைதி, பாதுகாப்பைப் பேணுவதற்கான அதன் சாசனம், கட்டாயமான பொறுப்பின்படி செயல்படுமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை மலேசியா வலியுறுத்துகிறது என்று பிரதமர் கூறினார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...