பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக மலேசியா துணை நிற்கும்: பிரதமர்

Date:

பலஸ்தீன மக்களின் போராட்டங்களுக்கு மலேசியா தொடர்ந்து துணை நிற்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடுமை, அடக்குமுறை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை  பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த அநீதியின் விளைவாக, நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பலியாகியுள்ளன என்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காசா பகுதியில் தற்போதைய வன்முறைக்கான மூல காரணங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பலஸ்தீனியர்களுக்குரிய இடங்களை நீண்டகால சட்டவிரோத ஆக்கிரமிப்பு, முற்றுகை, துன்பம், அல்-அக்ஸாவை இழிவுபடுத்துதல் என்று பலவிதங்களில் ஆக்கிரமிப்பாளராக இஸ்ரேல் செயலாற்றி வருவதை சொல்லி மாளாது.

இஸ்ரேல் தங்கள் அரசியலுக்காக பலஸ்தீனர்களை பலியாக்கி வருகின்றது என்று வெளியுறவு அமைச்சகம்  ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில், மேலும் உயிரிழப்புகள், துன்பங்கள்,  அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மத்திய கிழக்கின் சமீபத்திய வன்முறைகள் குறித்து மலேசியா கவலைப்படுகிறது.

சர்வதேச அமைதி, பாதுகாப்பைப் பேணுவதற்கான அதன் சாசனம், கட்டாயமான பொறுப்பின்படி செயல்படுமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை மலேசியா வலியுறுத்துகிறது என்று பிரதமர் கூறினார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...