பலஸ்தீன மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்திய மஹிந்த

Date:

இஸ்ரேல் மற்றம் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் தீவிர போர் நடைபெற்றுவரும் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாலஸ்தீன தூதரகத்துக்கு சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் பலஸ்தீனத்துக்கான ஆதரவே வெளிப்படுத்தியிருந்தார்.

பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியையும் மஹிந்த ராஜபக்ஷ 2014ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வழங்கியிருந்தார்.

பலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்து வருவதோடு பாலஸ்தீன கூட்டொருமைப் பாட்டிற்கான இலங்கை செயற்குழுவின் ஸ்தாபகத் தலைவராகவும் அவர் செயல்பட்டிருந்தார்.

பலஸ்தீனத்தை ஒரு தேசமாக 1988ஆம் ஆண்டு இலங்கை அங்கீகரித்தது என்பதும் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பலஸ்தீனத்தில் ‘மஹிந்த ராஜபக்ஷ வீதி’ என ஒரு வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...