பல இடங்களில் மண் சரிவு!

Date:

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பல மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதிப் பகுதியில் 3 இடங்களில் மண் சரிவு மற்றும் கற்கள் வீழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் இவ்வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மண் அகற்றும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...