பாலஸ்தீன தூதுவருடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தூதுக்குழு சந்திப்பு!

Date:

காஸாவில் தொடரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஜமாஅத்தின் தூதுக் குழுவொன்று அதன் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளியன்று (27) இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் டாக்டர் சுஹைர் எம்.எச். தர் ஸைட். அவர்களை தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது காஸா மற்றும் மேற்குக் கரையின் தற்போதைய நிலைமை குறித்து தூதுக் குழுவினருடன் கலந்துரையாடிய தூதுவர், இந்த சோகத்தின் போது பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டுக்காக நன்றி தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்கள் பாலஸ்தீனத்தில் நீதிக்காக தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீன மக்களுடனான அவர்களது ஒருமைப்பாட்டையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இதன்போது தூதுக்குழுவினர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் நகலை தூதுவரிடத்தில் கையளித்தனர்.

Popular

More like this
Related

2030 சவூதி விஷன்; அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி

புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை!

இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது...

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...