மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி யமீன் சிறைக் காவலில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றம்

Date:

சனியன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலைதீவு முற்போக்கு முன்னணி வேட்பாளர் கலாநிதி முஹம்மத் முஈஸின் வேண்டுகோளைத் தொடர்ந்து மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனின் சிறைவாசம் வீட்டுக் காவலாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னரே ஊழல் மற்றும் பணச் சலவைக் குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன், தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் ஸாலிஹின் ஆட்சியில் 11 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்தே அவர் தேர்தலில் வேட்பாளராக விண்ணப்பித்த போதும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த கலாநிதி முஈஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.

தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யமீனின் சிறைவாசத்தை வீட்டுக் காவலாக மாற்றினார்.

யமீனின் வீட்டுக் காவல் தற்காலிகமானது எனத் தெரிவிக்கும் மாலைதீவு ஊடகங்கள் யமீன் மீதான நீதிமன்ற விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...