வவுனியாவில் கோர விபத்து: விசேட அதிரடிப்படையின் இருவர் பலி!

Date:

வவுனியா வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த வீட்டுமதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதன் பாேது ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுள் இருவர் ஆபத்தான நிலையில்   அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பாெலிஸார் மேற்காெண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...