வெலிகமயில் புனித மீலாத் பெருவிழா: வெளிநாட்டவர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Date:

18 ஆவது வருடமாக இடம்பெற்ற புனித மீலாதுந் நபி பெருவிழா தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஆன்மீகத் தலைவர்  இமாம், ஷெய்ஹ், ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) தலைமையில் கடந்த 29  ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெலிகம பைத்துல் பரக்காஹ் இல்லத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஏராளமான நபி நேசர்கள் உட்பட இந்தியா, டுபாய், கட்டார், குவைத், மலேசியா, சிங்கப்பூர், சவூதி, லண்டன் உட்பட பல நாடுகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் (ஜம்இய்யதுல்) உலமா பொதுச்செயலாளர், டாக்டர் மௌலவி அன்வர் பாதுஷா (உலவி), சென்னை சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் டாக்டர் ஷெகு அப்துல்லாஹ் ஜமாலி, மௌலவி முஸ்தபா (மஸ்லாஹி) ஆகியோர் நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.

ஹொங்கொங் அஹ்மத் ஸாலிஹ் பாஹீமி மற்றும் மௌலவி பைஸல் காரி ஆகியோரின் நபி புகழ் கஸீதாக்களும் விழாவில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...