ஹமாஸ் -இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் : பேச்சுவார்த்தை நடத்தும் கத்தார்!

Date:

பணயக் கைதிகளாக பிடித்து சென்றவர்கள் நிலை என்னவாகும் என்பதுதான் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கத்தார் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஹமாஸ்- இஸ்ரேல் பக்கத்தில் இருந்து இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.தோகா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளுடன் கத்தார் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால், காசாவில் தாக்குதலை முடிக்கும் வரை இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு வருமா என்பது தான் சந்தேகம்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...