ஹமாஸ் -இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் : பேச்சுவார்த்தை நடத்தும் கத்தார்!

Date:

பணயக் கைதிகளாக பிடித்து சென்றவர்கள் நிலை என்னவாகும் என்பதுதான் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கத்தார் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஹமாஸ்- இஸ்ரேல் பக்கத்தில் இருந்து இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.தோகா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளுடன் கத்தார் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால், காசாவில் தாக்குதலை முடிக்கும் வரை இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு வருமா என்பது தான் சந்தேகம்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...