அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ள தனுஷ்க!

Date:

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

நேற்றிரவு இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, சிட்னியில் 11 மாத கால விசாரணையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டங்களின்படி குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணிடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனக் கூறினார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும், அதன் மூலம் இழப்பீடு கோரலாம் என்றும் தனுஷ்க குணதிலக கூறினார்.

அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக விரைவில் சிவில் வழக்கை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணத்தை தவறவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த தனுஷ்க குணதிலக, கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்னும் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், விரைவில் பயிற்சியில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

Popular

More like this
Related

கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு...

ரணிலின் விளக்கமறியல்: நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்...

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில்...

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23...