இந்திய – இலங்கை கப்பல் சேவை இன்று ஆரம்பம் l டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Date:

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று (14) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி முதலாவது பயணிகள் கப்பல் இந்தியாவில் இருந்து இன்று (14) காலை இலங்கையை வந்தடைய உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் இந்த பயணிகள் படகுச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 50 பயணிகளுடன் இந்த கப்பல் இன்று காலை 11.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கப்பல் கூட்டுத்தாபனம் பயணிகள் படகு சேவையை இயக்குகிறது.

இந்தியாவில் இருந்து காலை பயணத்தை  ஆரம்பிக்கும்  இந்த பயணிகள் கப்பல், பிற்பகல் 02.30 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்பட உள்ளது.

இரு வழி பயணத்திற்கு 53,500 ரூபாவும், ஒருவழி பயணத்திற்கு 27,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...