இன்றைய வானிலை அறிவிப்பு: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

Date:

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இவ்வாறு சிவப்பு நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நில்வலா கங்கை, களுகங்கை, கிங்கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சில பிரதேசங்களில் நீர் மட்டம் சிறிதளவு குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், நில்வலா கங்கையின் கரையோர மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட சிவப்பு அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...