இன்றைய வானிலை அறிவிப்பு: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

Date:

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இவ்வாறு சிவப்பு நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நில்வலா கங்கை, களுகங்கை, கிங்கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சில பிரதேசங்களில் நீர் மட்டம் சிறிதளவு குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், நில்வலா கங்கையின் கரையோர மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட சிவப்பு அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...